ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடந்த வினோத கொள்ளை

திருக்கோவிலூர் அஷ்டலட்சுமி நகரில் ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் அந்த பீரோவை வயல்வெளியில் வீசிவிட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை பீரோவை திறக்க முடியாததால் அவர்கள் வயல்வெளியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீட்டிலேயே கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply