shadow

ஏ.ஆர்.முருகதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு:

a.r.murugadossவிஜய் நடித்த ‘சர்கார்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏற்கனவே அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் வைத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கிவிட்ட நிலையில் சர்ச்சை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply