ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள் எம்ஜிஆர்-ஜெயலலிதா: தேனியில் பிரதமர் மோடி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்து, மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள் என தேனியில் நடைபெற்று வரும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மேலும் ஏழைகளுக்காக வாழ்ந்த அந்த இருபெரும் தலைவர்களால் தேசம் பெருமை கொள்வதாகவும், நாளை நமதே, நாற்பதும் நமதே என்பது மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது என்றும் கூறினார்.

மேலும் பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். மேலும் இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள நாம் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply