ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி கோர்ட்டில் ப. சிதம்பரம் பதில் மனு
ஏர் செல் மேக்சிஸ் வழக்கு குறித்து தன் மீது சி.பி.ஐ. கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரம் இல்லை என்று டெல்லி நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பதில் மனுவில், ஏர் செல் மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை. இந்த வழக்கில் என்னை காவலில் வைத்து விசாரிக்க தேவை இல்லை. எல்லாமே ஆவண ரீதியிலான ஆதாரங்கள்தான். அவை எல்லாமே சி.பி.ஐ. வசம்தான் உள்ளன. வழக்கின் ஆதாரங்களை, சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என்று கூறுவதற்கு சி.பி.ஐ. எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ப. சிதம்பரம் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் நவம்பர் 26-ந் தேதி வரை கைது செய்யப்படாமல் இருக்க சி.பி.ஐ. கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.