ஏசி சண்முகம் தொடர்ந்து முன்னிலை: என்ன ஆச்சு திமுகவுக்கு?

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தொகுதியில் வெற்றிக்காக திணறிக் கொண்டு இருக்கின்றது.

அங்கு அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் காலை 11.30 மணி நிலவரப்படி 2 லட்சத்து 19 ஆயிரத்து 560 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவின் கதிர் ஆனந்துக்கு 2 லட்சத்து 13 ஆயிரத்து 198 வாக்குகள் கிடைத்துள்ளது. இருவருக்கும் இடையே 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மிக எளிதாக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவால் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற திணறிக்கொண்டிருப்பது அரசியல் உலகில் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Leave a Reply