எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்
புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீர்ர்கள் வீரமரணம் அடைந்த அதிர்ச்சியே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் சற்றுமுன் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்துள்ள செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
இன்று நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மாவோயிஸ்ட் தரப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
மேலும் இந்த சண்டையில் இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.