shadow

எல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான். போர் மூளுமா?

pakistanஇந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வழக்கத்திற்கு மாறாக பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் ரேஞ்சர்ஸ் படையை மட்டுமே பாதுகாப்புக்கு பயன்படுத்தும் நிலையில் கடந்த ஒரு வாரமாக வழக்கத்திற்கு மாறாக ஜம்முவை ஒட்டிய 190 கிமீ எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை அந்நாட்டு அரசு குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படையும், மத்திய அரசும் இதை உறுதி செய்துள்ளதால் இருநாட்டு எல்லையில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிஃப் விரைவில் ஓய்வு பெற இருப்பதால் ஓய்வுக்கு முன்னர் எல்லையில் பதட்டத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் என்ன திட்டத்துடன் படைகளை குவித்து வருகிறது என்பது குறித்து உளவுத்துறை தகவல்களை திரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply