shadow

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அருகே ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை நிகழ்வதை பாதுகாப்புபடை வீரர்கள் உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது எல்லை பகுதியில் உள்ள வேலியை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்மநபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பாதுகாப்புபடை வீரர்கள் எச்சரித்ததை தொடர்ந்து அந்த நபர் அவர்களிடம் சரணடைந்தார். பாதுகாப்புபடை வீரர்கள் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது (வயது 65) என்பதும், அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது.

Leave a Reply