எல்லா மதத்திலும் தீவிரவாதம் உள்ளது: புதுவை முதல்வர்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் கூறி சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் இந்து மட்டுமின்றி , கிறிஸ்தவம், சீக்கியம் என எல்லா மதத்திலும் தீவிரவாதம் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா மதத்திலும் தீவிரவாதம் இருப்பதாகவும், இந்து, கிறிஸ்தவம், சீக்கிய மதங்களில் தீவிரவாதிகள் இருப்பதாகவும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

மேலும் 2014ல் மோடி அலை வீசியதாகவும், 2019ல் மோடி எதிர்ப்பு அலை வீசுவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார். பிரதமர் மோடியை பதவியில் இருந்து தூக்கி எரிய வேண்டும் எனக் கூறிய புதுச்சேரி முதல்வர், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்

Leave a Reply