எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: டிராபிக் ராமசாமி தொடர்நத் அதிரடி வழக்கு
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
டிராபிக் ராமசாமியின் இந்த முறையீடு இன்றே அவசர வழக்காக விசாரணை நடத்தப்படும் என கூறிய தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிபதி மணிக்குமார் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
எனவே இன்றே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாலையில் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.