என்ன ஆச்சு ஈரோடு மதிமுக வேட்பாளருக்கு? திடீர் பதட்டம்
திமுகவிடம் இருந்து ஈரோடு என்ற ஒரே ஒரு தொகுதியை மதிமுக பெற்ற நிலையில் அந்த தொகுதியின் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியின் வேட்மனுவை பெறுவதற்கு தேர்தல் அதிகாரி காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கணேசமூர்த்தி தர்ணா செய்து வருகிறார்.
இன்னும் ஒருசில மணி நேரங்களே வேட்புமனு தாக்கல் செய்ய கெடு இருக்கும் நிலையில் ஈரோடு பகுதியில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.