என்ன ஆச்சு ஆறுமுகச்சாமி ஆணையம்? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு விசாரணையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.