எடப்பாடி அணியில் தீபா? பேரவை கலைக்கப்படுகிறதா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை அமைத்து அதை நடத்தி வரும் நிலையில் அந்த பேரவை கலைத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தீபா தனது தொண்டர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும், தொண்டர்கள் விரும்பினால் எடப்பாடி அணியில் இணைய தயார் என்று அவர் கூறியதாகவும் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
எடப்பாடி அணியில் ஏற்கனவே இணைந்த ஓபிஎஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது போல், தீபாவுக்கும் ஏதாவது பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.