வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய அணிகள் போட்டியிடும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அணி, சீமான் அணி மற்றும் தினகரன் அணி என கூடுதலாக 3 அணிகள் போட்டியிடுகின்றன

இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான அணியை மூன்றாவது அணி என்று கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தனது அணி மூன்றாவது அணி அல்ல என்றும் முதல் அணி என்றும் அவர் தெரிவித்தார்

மக்களோடு மக்களாக நாங்கள் நெருங்கி பழகினோம் என்றும் மக்கள் ஆதரவு பெற்ற எங்கள் அணி மூன்றாவது அணி என்று சொல்வது பொருத்தமாக இருக்காது என்றும் எங்கள் அணி தான் முதல் அணி என்றும் அவர் தெரிவித்தார்

முதல் அணி என்று கூறும் கமலஹாசன் வெற்றியிலும் முதலிடத்தை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply