ஊழல் புகார் எதிரொலி: இந்திய விளையாட்டுத்துறை அதிகாரிகள் கைது!
இந்திய விளையாட்டு ஆணைய போக்குவரத்து பிரிவில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததை அடுத்து இந்த புகார் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசசஅரணை செய்து வந்தனர். அதுமட்டுமின்றி டெல்லியில் உள்ள விளையாட்டுத்துறை ஆணைய அலுவலகத்தில் அதிரடி சோதனையும் நடத்தினர்.
இந்த சோதனையில் இயக்குநர் உள்பட 4 அதிகாரிகள் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே இந்த நடவடிக்கையை வரவேற்பதாக இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.