ஊர் பெயர் தக்கலையா? தக்காளியா? பஸ் டிக்கெட்டில் ஒரு காமெடி
பேருந்துகளில் தற்போது மின்னணு டிக்கெட்டுகள் கொடுக்கும் முறை கிட்டத்தட்ட தமிழகத்தின் பல பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது
இருப்பினும் இந்த டிக்கெட் முறையில் சில சமயம் ஊரின் பெயர் தவறாக குறிப்பிடுவதாக பயணிகளிடையே புகார் எழுந்து வந்துள்ளது
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை என்ற ஊரில் இயங்கி வரும் அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டில் தக்கலை என்ற ஒரு ஊரின் பெயருக்கு பதிலாக தக்காளி என குறிப்பிடப்பட்டிருந்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்
இதுகுறித்து போக்குவரத்து துறையிடம் அவர்கள் புகார் அளித்த நிலையில் உடனடியாக அதை திருத்துவதற்கு போக்குவரத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதோடு பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.