உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த முடிவு இல்லை: நீதிமன்றம் சென்ற திமுக!
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைமை எதிர்பார்த்த நிலையில் தற்போது திமுகவும் அதிமுகவும் மாறி மாறி சம அளவில் வெற்றி பெற்று வருவதாக முன்னிலை நிலவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன
இதனை அடுத்து தேர்தல் முடிவுகளால் அதிருப்தி அடைந்த திமுக திடீரென தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.