திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் கடந்த சில நாட்களாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி உறுதியாக உள்ளது

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கப்படுவதாகவும் அது மட்டுமின்றி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்கப்படும் என்றும் இரு தரப்பினர் பேசி முடித்துள்ளனர்

இது குறித்த ஒப்பந்தத்தில் இன்று காலை முக ஸ்டாலின் மற்றும் கேஎஸ் அழகிரி ஆகிய இருவரும் கையெழுத்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply