முக ஸ்டாலின்
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில்
எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது என்றும், அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா தமிழக முதல்வர் என்றும் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னதாக என் சாவுக்கு காவல் அதிகாரிதான் காரணம்’என கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாகவும், மற்றொரு மரணத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.