உயர் மின் கோபுரங்கள் விவகாரம்: 13 மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்
நாமக்கல் மாவட்டம் படைவீடு என்ற பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் இன்று 3வது நாளாக நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருபவர்களை மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் போராட்டம் மேலும் வலுத்துள்ளது.
ஏற்கனவே இதுகுறித்த வழக்கு ஒன்றில் விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், இவ்விஷயத்தில்,மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.