shadow

உபி மாநிலத்தில் மீண்டும் ரயில் விபத்து: 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தொடர் ரயில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் இன்று அதிகாலை 4.18 மணிக்கு வாஸ்கோட காமா -பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 13 பெட்டிகள் தடம்புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வடக்கு ரயில்வே பி.ஆர்.ஓ அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இன்னும் ஒருசில நிமிடங்களில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும் என்று இந்திய ரயில்வேயின் பி.ஆர்.ஓ அனில் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருவதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply