உண்மையை காலம் சொல்லும்: பாலியல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய வைரமுத்து
கவிஞர் வைரமுத்து மீது பெண் பத்திரிகையாளர், பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டிருக்கும் நிலையில் வைரமுத்து தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வராமல் இருந்ததால் பரபரப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் வைரமுத்து தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்; என்று வைரமுத்து கூறியுள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@Vairamuthu) October 10, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.