உணவில் புழு: முருகன் இட்லிக்கடை உரிமம் தற்காலிக ரத்து

சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் இயங்கி வரும் முருகன் இட்லி கடை என்ற ஓட்டலின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்தக் கடையின் உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்த நிலையில் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் அந்த ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட உணவுகள், சமைப்பதற்கு முன் இருக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனை செய்த அதில் சரியான சுத்தம் கடைபிடிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற அந்த ஓட்டல் தவறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply