உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை கொடுப்பீர்களா? தமிழ்ப்பெண்ணிடம் கேட்ட பிரதமர் மோடி
ஏழை, எளிய மக்களுக்காக இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தராம்மா என்ற பெண்ணுக்கு இலவச எரிவாயு வழங்கப்பட்ட நிலையில் அவரிடம் பிரதமர் மோடி பேச அவர் பேசியதை மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்தார்.
முதலில் வணக்கம் ருத்தராம்மா என்று பிரதமர் மோடி தமிழில் பேசிய பின்னர் இந்தியில் பேசிய அவர், உங்கள் வீட்டில் எரிவாயு இணைப்பு எப்படி உள்ளது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ருத்தராம்மா, நன்றாக உள்ளது என்றும் முன்பேல்லாம் விறகு அடுப்பில் கரும்புகையில் கிடந்து அல்லல் பட்டதாகவும், தற்போது அந்த சிரமம் இல்லை என்றும் கூறினார். இதைக்கேட்ட மோடி, தனது தாயும் முன்பு காலத்தில் விறகு அடுப்பில் புகைமூட்டத்தில் கஷ்டப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
மேலும் ருத்தராம்மாவிடம் பேசிய மோடி, உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை செய்து தருவீர்களா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ருத்ராமா, கண்டிப்பாக தோசை செய்து தருவேன் என்று கூறினார். மோடியின் இந்த சுவாராஸ்சியமான பேச்சு அங்கிருந்தவர்களுக்கு உற்சாகம் அளித்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.