உங்கள் பான்கார்டு இன்னும் 3 நாட்களில் காலாவதி ஆகிவிடும்: உடனே இதை செய்யுங்கள்

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதியாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதால் இதுவரை பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் உடனே இணைத்து கொள்ளவும், ஆதாருடன் பான்கார்டை இணைக்க பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் அவகாசம் தரப்படாது என்றும், இணைக்க தவறினால், இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதை கண்காணிக்க ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டும், இன்னும் பலர் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தவறினர். இதனால், வரும் செப்டம்பர் மாதம் 30ந் தேதிக்குள் அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைக்க தவறினால், இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply