உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் ஈரான் நாட்டில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 180 பேர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த விமான விபத்துக்கு அமெரிக்கா காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நாட்டு ஏவுகணைகள் தாக்குதல் நடந்தபோது அதில் ஒரு ஏவுகணை தான் உக்ரைன் விமானத்தின் மீது தவறுதலாக மோதி விட்டதாகவும் அதனால்தான் இந்த விமான விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இது குறித்த வீடியோக்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதா க கனடா உள்பட ஒருசில நாடுகள் சந்தேகம் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply