இழுபறியில் இருந்த திருமாவளவன், ஓபிஎஸ் மகன் வெற்றி! அன்புமணி தோல்வி
திருமாவளவன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அன்புமணி ஆகிய மூவரின் வெற்றி தோல்வி இழுபறியில் இருந்த நிலையில் திருமாவளவன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வெற்றி சான்றிதழை கொடுத்தனர்.
ஆனால் அதிமுக கூட்டணி முதன்முதலாக இணைந்து 7 தொகுதிகளை பெற்ற பாமக, அன்புமணி தொகுதி உள்பட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஜாதி அரசியலை மையமாக கொண்ட பாமக, சுயநல அரசியலை மையமாக கொண்ட தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.