இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்காத தோனி இனி எந்த போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் பார்க்க கூறிவருகின்றனர்

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்காமல் இருக்கும் தோனியின் பிடிவாதத்தால் தொடர் தோல்வி நடக்கிறது என்று நெட்டிசன்கள் பதில் கூறி வருகின்றனர்

கெய்க்வாட், சாண்ட்னர், ஜெகதீசன் ஆகியவர்களை அணியில் சேர்க்காமல் மிகவும் மோசமாக விளையாடும் கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா போன்றவர்களை மீண்டும் மீண்டும் சேர்ப்பது தோனியின் பிடிவாத குணத்தைக் காட்டுகிறது

அதுமட்டுமின்றி சென்னை அணியில் தமிழர்களை சேர்ப்பதற்கு அவருக்கு ஏன் மனம் இல்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது

படுமோசமாக விளையாடும் கேதார் ஜாதவ்வை நம்பும் தோனி, ஜெகதீசன் மீது ஏன் நம்பிக்கை வைக்க மாட்டேன் என்கிறார்?

இதே நிலை தொடரந்தால் இனிவரும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது

Leave a Reply