இலங்கை: 2 பிரதமர், 2 சபாநாயகர்கள் இருப்பதால் குழப்பம்
இலங்கையில் தற்போது 2 பிரதமர்கள், 2 சபாநாயகர்கள் இருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர்களாக ரணில் விக்ரம்சிங்கே மற்றும் ராஜபக்சே ஆகியோர்களும், சபாநாயகர்களாக குருஜெயசூர்யா, தினேஷ் குணவர்த்தன ஆகியோர்களும் உள்ளனர். இதனால் அந்நாட்டில் குழப்பம் உச்சத்தில் உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஏற்கனவே குரு ஜெயசூர்யா இருந்த நிலையில் தற்போது புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றார். சபாநாயகர் குருஜெயசூர்யா, ராஜபக்சேவை இலங்கை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.