இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

இலங்கையில் நேற்று தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் சர்ச்சுகள் மற்றும் ஓட்டல்களில் தொடர் குண்டுவெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது 6ஆக உயர்ந்துள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

மேலும் இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோர்கள் குறித்த தகவல் அறிய +94777903082, +94112422788, +94112422789 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும்படியும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Reply