shadow

இலங்கை ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா காரணமா? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆட்சி மாற்றத்திற்கு ராஜபக்சேவின் இந்திய வருகையே காரணம் என்றும், ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தொடக்கத்தில் இருந்தே பல பிரச்சினைகள் நிலவுவதாகவும், அவை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும் இதற்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply