shadow

இலங்கை அணியின் கேப்டன் திடீர் மாற்றம்: தொடர் தோல்வியால் அதிரடி

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றியை ருசிக்காமல் தொடர் தோல்வி அடைந்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கை அணியின் கேப்டனாக இருந்து வரும் உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணி இந்தியா, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடிய மூன்று தொடர்களையும் இழந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை

இந்த நிலையில் வரும் டிசம்பர் 10 முதல் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு இலங்கை அணியின் கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 20 ஓவர் போட்டிக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் டிசம்பர் 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டியும், டிசம்பர் 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply