இலங்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பரபரப்பு தகவல்
இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தொடர் வெடிகுண்டு வெடித்ததால் தீவிரவாதிகளை பிடிக்க இலங்கை ராணுவமும், போலீசார்களும் வேட்டையாடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த தேடுதல் வேட்டையின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து இலங்கையில் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
Leave a Reply
You must be logged in to post a comment.