இலக்கியத்திற்கான புக்கர் பரிசு அறிவிப்பு: வென்ற இரு பெண்கள்
சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்று புக்கர் பரிசு. அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான ‘புக்கர்’ கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மார்க்கெரட் ஆட்வுட், லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் பெர்னான்டினி இவாரிஸ்டோ ஆகிய இரண்டு பெண்கள் வென்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் புக்கர் விருது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இவ்வாண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக புக்கர் பரிசை இரண்டு பேர் அதிலும் இரண்டு பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.