உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுதியே ஆகவேண்டும் என யுஜிசி அறிவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு உள்பட பல மாநில அரசுகள் மீது யுஜிசிக்கு கோரிக்கை வைத்தனர் ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
இந்த நிலையில் யுஜிசியின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் இருந்து 36 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கும் வழங்க இருக்கிறது. இந்த தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.