shadow

இறந்த கொரோனா நோயாளியின் பாக்கெட்டில் இருந்து ரூபாய் 35 ஆயிரம் திருடிய மருத்துவமனையின் வார்டு பாய் குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். அவருடைய எடுத்து சென்ற வார்டுபாய்கள், அவரது பையில் இருந்து ரூபாய் 35 ஆயிரத்து திருடியுள்ளார்கள்.

இந்த சம்பவம் சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளதை அடுத்து அந்த வார்டு பாய் மீது விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த கொரோனா நோயாளியிடமிருந்து பணம் திருடிய ஈவிரக்கமில்லாத அந்த வார்டுபாய்களுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது

Leave a Reply