shadow

இருளை அகற்றி ஒளிதரும் சூரியனுடன் இணைந்துள்ளேன்: செந்தில்பாலாஜி

தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னில்லையில் திமுகவில் இணைந்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலினை நான் சிறந்த தலைவராக பார்க்கிறேன், அவர் மீதான ஈர்ப்பால் திமுகவில் என்னை இணைத்து கொண்டேன். கரூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திமுகவில் இணைந்தேன். பல்வேறு அரசியல் கட்சிகளில் நான் இருக்கவில்லை –

இருளை அகற்றி ஒளி தரும் சூரியன், என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய ஒளி தந்திருக்கிறார்கள்.

திமுகவில் இணைந்தப்பின் செய்தியாளர்களுக்கு செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தொண்டர்களை அரவணைத்து செல்பவரே உண்மையான அரசியல் தலைவர்; அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவர். மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன், அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தி.மு.கவில் இணைந்தேன்

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 

Leave a Reply