இரும்புத்திரை’ கூட்டணியில் சிவகார்த்திகேயன்
விஷால், சமந்தா நடித்த வெற்றிப்படமான இரும்புத்திரை படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கினார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர்களும் பணிபுரிந்த நிலையில் தற்போது இதே டீம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்துள்ளனர்.
24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 15வது படமாக உருவாகவுள்ள ஒரு ஆக்சன் த்ரில் படத்திற்காக இரும்புத்திரை கூட்டணி தற்போது இணைந்துள்ளது. இந்த தகவலை 24 ஏம் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது.
இந்த படத்திலும் ஆக்சன் கிங் அர்ஜூன், ஒரு டிஜிட்டல் கிரைம் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், ஆனால் இரும்புத்திரை படத்தின் சாயல் சிறிதுகூட இந்த படத்தில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
//twitter.com/24AMSTUDIOS/status/1058196333637468165
Leave a Reply
You must be logged in to post a comment.