இரவோடு இரவாக காணாமல் போன பாண்டி பஜாரின் பழமையான மரம்

சென்னை பாண்டிபஜார் ஸ்மார்ட் நகரமாக மாற்றும் திட்டத்தின்படி சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த சாலையில் இருந்த மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அழகான பிளாட்பாரம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை பாண்டிபஜார் ஸ்மார்ட் சாலையில் உள்ள பழமையான மரம் ஒன்று திடீரென இரவோடு இரவாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்ததில் அந்த பழமையான மரம் அருகே பிரபல ஜவுளிக்கடை ஒன்று இருந்ததாகவும் அந்த ஜவுளிக்கடையை மறைக்கும் வகையில் அந்த மரம் இருந்ததால் அந்த மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply