shadow

இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு விடும் என சென்னை மாநகராட்சி மேயர் சுகன்சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரண்டாவது அலையில் இருந்து இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டு விடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சென்னை மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டதுபோல் நேற்று சென்னையில் 3 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்புதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது