இரட்டை இலை சின்ன விவகாரத்தில் மத்திய அரசின் பின்னணி உள்ளது: தங்கதமிழ்ச்செல்வன்
இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே என்று அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் தினகரன் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதிமுகவின் இமேஜ் தற்போது பொதுமக்களிடம் தாறுமாறாக டேமேஜ் ஆகியுள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டுமே ஓரளவுக்காவது வெற்றியை எதிர்பார்க்க முடியும். எனவே இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பெற கடும் சட்டப்போராட்டம் நடத்தியது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே என்று தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய டிடிவி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் ‘ பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் மத்திய அரசு பின்னணியில் உள்ளது..” என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.