இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கியது. மேலும் ஈபிஎஸ் அணியே உண்மையான அதிமுக என்றும் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்டது
இந்த தீர்ப்பின் காரணமாக டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்கள் ஐந்து எம்பிக்கள் ஈபிஎஸ் அதிமுகவுக்கு மாறிவிட்டனர். மற்றவர்களும் எந்த நேரத்திலும் மாறும் வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இரட்டை இலை சின்ன வழக்கில் தேர்தல் ஆணையம் வழங்கிய ஒருதலைபட்சமான உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக தினகரன் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.