shadow

இம்ரான்கானுக்கு அசாருதீன் வாழ்த்து

இம்ரான்கான் மற்றும் அசாருதின் ஆகியோர் சம காலத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்தவர்கள். இருவருக்கும் நல்ல புரிதல் இருந்ததாக கூறப்படும் நிலையில் கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாருதின் மேலும் கூறியபோது, ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இம்ரான்கான் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. அவர் நாட்டின் பிரதமரான பிறகும் இதேபோன்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும்.

ஆனால், இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதில் அவர் என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

Leave a Reply