மீண்டுமா என மக்கள் அதிர்ச்சி
கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு என்ற அவஸ்தையில் இருக்கும் பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதியுடன் ஊரடங்கில் இருந்து விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், இதனையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனால் தேனி மாவட்டம் போடியில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் 14 நாட்கள் ஊரடங்கா? என்ற போடி மக்களின் புலம்பல் அம்மாவட்டம் முழுவதும் கேட்கின்றது என்பது குறிப்பபிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.