இன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்: ராகுல்காந்தி
நாடாளுமன்றத்தில் இன்று எம்பிக்கள் பதவியேற்று வரும் நிலையில் முதல் நபராக வாரணாசி தொகுதி எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று கொண்டார். அதன் பின்னர் ஒவ்வொரு எம்பியாக பதவியேற்று கொள்ள, சற்றுமுன் வயநாடு தொகுதி எம்பியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவியேற்று கொண்டார்
தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்க உள்ளேன் என்றும், வயநாடு தொகுதி எம்.பியாக இன்று பிற்பகல் பதவியேற்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.