இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு: ஒரு குவார்ட்டர் என்ன விலை தெரியுமா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2017ம் ஆண்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல் பீர் விலை கடந்த 2014ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று முதல் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம். எந்த பிராண்ட் மது பானங்களாக இருந்தாலும் குவாட்டர் விலை 10 ரூபாய் உயர்வாகவும், ஆஃப் விலை 20 ரூபாய் உயர்வாகவும், ஃபுல் விலை 40 ரூபாய் உயர்வாகவும் இன்று முதல் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் பீர் விலை ரூபாய் 10 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விலை உயர்வு அறிவிப்பு அரசுக்கு கூடுதல் வருமானமாக இருந்தாலும் குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply