இன்று மதியம் 2.30 மணிக்கு 2ஜி தீர்ப்பு தேதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா மற்றும் கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பை பொறுத்தே திமுகவின் எதிர்காலம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு திமுகவுக்கு பாதகமாக வந்தால் தமிழக அரசியலில் குழப்பம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்பட பல கூட்டணி கட்சிகள் விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதே சமயம் இந்த வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டால் திமுகவின் இமேஜ் அதிகரித்து அது ஆட்சியை பிடிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.