‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா?
விஷ்ணு விஷால் நடிப்பில் ரவிகுமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கும் இந்த படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பதும் தெரிந்ததே
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் சிவி குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். தினேஷ்குமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் நடைபெறவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் உள்பட ஒருசில நடிகர்கள் இந்த படத்திலும் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.