இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தில் இன்று மது விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை அடுத்து தமிழகமெங்கும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
முன்னதாக மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை முடிவில், காந்தி நினைவு நாளான இன்று மது விலக்கு நாளாக அறிவித்து, தமிழகம் முழுவதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், பார்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளில் மது விற்பனைக்கு தடை விதித்தும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.