இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு: பிரதமர் மோடி

இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். அதில் ஒரு முக்கிய விஷயத்தையும் அவர் தெரிவிக்கவுள்ளாராம்

டி.வி., ரேடியோ, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டுமக்களிடம் பிரதமர் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது

இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்திலும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply